சம்பியனானது அரபா அணி

பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளைஞர்கள் சபை வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் அணியை வீழ்த்தி பாலமுனை அரபா விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் (ஜூன் 26) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அரபா அணி 5 ஓவர்களுக்கு 65 ஓட்டங்களை பெற்ற நிலையில் எதிரணியை 64 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

வெற்றி பெற்ற அணிக்கு 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு மற்றும் வெற்றி கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வழங்கினார்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...