மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

யாழ்ப்பாணம், வரணி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி  சென்று கொண்டிருந்த போது  சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- யாழ். விசேட நிருபர் 


Add new comment

Or log in with...