- 969 பரீட்சாத்திகளின் முடிவுகள் இடைநிறுத்தம்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, கடந்த 2017 டிசம்பரில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இப்பரீட்சைகளின்போது இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.
நாடு முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில், 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment