Tuesday, April 20, 2021 - 8:28am
நாடு முழுவதும், நேற்று முன்தினம் ஏப்ரல் 18 நள்ளிரவு முதல் மேற்கொண்ட 18 மணி நேர விசேட நடவடிக்கையில், போதையில் வாகனம் செலுத்திய 905 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன் போது பல்வேறு போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 6,898 பேருக்கு எதிராக போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Add new comment