Tuesday, April 28, 2020 - 9:40am
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வர முடியாமல் பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 73 பேர், விசேட விமானம் மூலம் நேற்றிரவு (27) நாட்டை வந்தடைந்தனர்.
பங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 1423 எனும் விமானம் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த மாணவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Add new comment