கோயம்புத்தூரில் சிக்கியிருந்த மாணவர்கள் இலங்கை வருகை

இந்தியாவின் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 113 பேருடன், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 1194 எனும் விசேட விமானம், இன்று (26) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கைக்கு வர முடியாமல் கோயம்புத்தூரில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மாணவர்களை அழைத்து வருவதற்காக குறித்த விமானம்  இன்று காலை 9.05 மணியவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்றிருந்தது.

இவ்விமானத்தில் விமானி உட்பட விமான சேவை பணியாளர்கள் 07 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...