முன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (20) காலை ஆஜரானார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ரூபா 50 மில்லியன் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த முறைகேடு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றதோடு, குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...