சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 37,400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

- பொலிஸ் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு

மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்துமகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 37,400 சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதான வேவல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (13) இரவு விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் வரியின்றி கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹபாகே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, மஹபாகே பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...