கைதான அபே ஜனபல கட்சி தலைவருக்கு ஓகஸ்ட் 31 வரை விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேகநபர் நேற்றையதினம் (24) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 05ஆம் திகதி தங்காலை மொரகெட்டிஆர பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொலை செய்து மேலும் இருவரைக் காயப்படுத்திய குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றையதினம் (24) அவர் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


Add new comment

Or log in with...