Friday, August 27, 2021 - 7:08pm
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீ. தியாகேந்திரனினால், 'இட்டுகம' (செய்கடவை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, நன்கொடையாக வழங்கப்பட்ட ரூபா 10 மில்லியன் நிதிக்கான காசோலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால், இன்று (27) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இது தொடர்பான காசோலை கையளிக்கப்பட்டது.
Add new comment