மாவனல்லையில் 18 பேர் உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தில் 41 பேர் அடையாளம்
கேகாலை மாவட்டத்தில், மாவனல்லை, ஹெம்மாத்தகம, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குருணாகல் மாவட்டத்தில் கிரியுல்ல பொலிஸ் பிரதேசம், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய, நேற்று (02) இரவு முதல் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களாக மாவனல்லையில் 18 பேரும், அரநாயக்க பகுதியில் 10 பேரும், வரக்காபொலவில் 11 பேரும், யட்டியாந்தோட்டை மற்றும் ருவன்வெல்லவில் தலா ஒருவரும் என, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment