Monday, August 17, 2020 - 1:12pm
நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
கெரவலபிட்டி, உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
மீண்டும் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கைமய இரு மணித்தியாலங்களுக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Add new comment