வெலிமடை, நுகதலாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (12), குறித்த பிரதேசத்தில் 60 வயதுடைய ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கூரிய ஆயுதத்துடன் 81 வயதுடைய சந்தேகநபரை நேற்று (13) கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பம்பரபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வெலிமடை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Add new comment