வெலிமடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

வெலிமடை,  நுகதலாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்குதலுக்குள்ளான ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (12) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நுகதலாவ, ஜயசூரிய மாவத்தையைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


Add new comment

Or log in with...