Friday, November 22, 2019 - 5:50pm
சுமார் ரூ. 2 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற முயற்சி செய்த சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம், முன்னேஸ்வரத்திலுள்ள ஆலயமொன்றி உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயற்சித்த வேளையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபர் ரூ. ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Add new comment