யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள், வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம் ஒன்றிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல், வாள் ஒன்று, சைக்கிள் ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
குறித்த பகுதியால் இராணுவத்தினர் சுற்றுக்காவலுக்கு (ரோந்து) சென்றபோது, மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்தியபோதே குறித்த பொருட்களை மீட்டு, தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், இளைஞர் ஒருவரை நேற்றிரவு (02) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
Add new comment