Wednesday, September 30, 2015 - 10:45am
வவுனியா, குடாகச்சிகுடியில் புதையல் தோண்டிய வர்த்தகர் உள்ளிட்ட குழுவை கைதுசெய்யாது, குற்றவாளிகளை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யு.கே. திஸாநாயக்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காலியாலயத்தின் தலைமை பொலிஸ் பரீட்சகர் சுஜீவ பிரியதர்சன ஆகியோரை எதிர்வரும் ஒக்டேபார் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் வீ. ராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட மேலும் 6 பேருக்கு, தலா ரூபா ஒரு இலட்சமும் மற்றுமொருவருக்கு ரூபா 1,75,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
Add new comment