Wednesday, September 23, 2015 - 12:00pm
வவுனியாவில் பிரதி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியபோது புதையல் தோண்டுவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில் சரணடைந்த யூ.கே. திஸாநாயக்கவை எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா, குடாகச்சிக்கொட்டிய குளத்திற்கு அருகில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றில் இன்று (23) இடம்பெற்ற விசாரணைகளின்போதே குறித்த பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேலதிக நீதவான் இவ்வுத்தரவை வழங்கியிருந்தார்.
குறித்த DIG இவ்வழக்குத் தொடர்பில் தேடப்பட்டு வந்ததோடு கடந்த 19 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸில் சரணடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment