Monday, June 13, 2016 - 11:30am
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
பிவிதுரு ஹெல உருமய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, பொலிஸ் விசேட பிரிவில் ஆஜரானார்.
இன்று (13) காலை, பொலிஸ் தலைமையகத்திலுள்ள பொலிஸ் விசேட பிரிவிற்கு அவர் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலியான ஆவணங்களை தயாரித்து, நிறுவனமொன்றின் பங்குகளை விற்றார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்யவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு, பிரையன் ஜோன் செடிக் எனும் வெளிநாட்டவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment