Wednesday, June 8, 2016 - 11:15am
RSM
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (07) இரவு 11.45 மணியளவில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதா மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13233","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
குறித்த சடலத்தை மீட்ட பொலிஸார், அது, மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த 49 வயதான செல்வசுந்தரம் என்ற நபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவர், சுகவீனம் காரணமாக நேற்று (07) மாலை சிகிச்சைக்கென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"13234","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
இது தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)
Add new comment