துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; சிறுவன் உள்ளிட்ட இருவர் காயம்

- 2019 கொலைக்கு பழிக்குப்பழி

இன்று (19) பிற்பகல் காலி, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவலகல பிரதேசத்தில் கறுவா தோட்டமொன்றில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபரும் சிறுவன் ஒருவனும் கராப்பிட்டி மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர் மற்றும் காயமடைந்தவர் ஆகிய இருவரும் கறுவா அரைத்துக் கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த மூவரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

84 வகை துப்பாக்கி மூலம் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பஸ் ஒன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு எல்பிட்டிய நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய ஆந்தகல, ஊரகஹ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்தவர்கள் கருவலகல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மற்றும் 04 வயதுடைய தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...