தமது இராஜாங்க அமைச்சர் பதவி மற்றும் பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுன தலைமைத்துவ பதவியில் இருந்து விலகுவதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
மே 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவிகளில் இருந்து விலகுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் உர மானியத்தை வழங்குவதற்கும் வலியுறுத்துவதாக தெரிவித்து தான் பதவி விலகுவதாக தலைப்பிட்டு குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாதுகாப்பு பிரிவின் ஆலோசனைக்கமைய இன்று (02) இடம்பெறவிருந்த விவசாய சம்மேளன கூட்டம் இடம்பெறாது என, அவர் இறுதியாக நேற்றைய தினம் (02) தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை இட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Add new comment