பாணந்துறையில் அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி

பாணந்துறையில் அம்பியூலன்ஸ் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (27) குறித்த அம்பியூலன்ஸ் வாகனம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இரண்டு மோட்டார்சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.

ஆனாலும் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் உரிய முறையில் செயற்படாததன் காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெறவில்லையென அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...