Thursday, October 28, 2021 - 12:36pm
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய, இன்று (28) பி.ப. 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
தற்போது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள கெரவலப்பிட்டி, யுகதனவி அனல் மின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.