சுங்கவரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட 14,000 சிகரெட்டுகளுடன் சீன பிரஜை ஒருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (03), கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த சிகரெட்டுகளுடன் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் தங்கியிருந்த அறையிலிருந்து சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை இன்று (04) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment