கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 272 பேர்

- அமீரகத்திலிருந்து 193 பேர் திரும்பினர்

கொவிட்-19 உலகளாவிய தொற்று நோயைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், கட்டாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 272 பேர், இன்று (01) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 264 பேர், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.40 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஏனைய 08 பேர், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை 1.45 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 193 பேர், நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


Add new comment

Or log in with...