ஓமானிலிருந்து 288 பேர் நாடு திரும்பினர்

- ஹொங்கொங்கிலிருந்தும் 26 பேர் வருகை

இலங்கைக்கு வர முடியாமல், ஓமானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 288 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமொன்று, இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்விமானப் பயணிகளை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 206 எனும் விசேட விமானம், ஓமானின் மஸ்கட் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.  

இவ்விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, ஹொங்கொங்கிலிருந்து இலங்கைக்கு வர முடியாமல் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு (28)  9.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...