Wednesday, June 10, 2020 - 9:52am
மின்சாரம் தாக்கியதில், இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நிவித்திகலையின் உடகரவிட்ட, உடவதுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.ருவன் குமார் (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மரத்தை வெட்டிய நிலையில், மரம் மின்சாரக் கம்பிகளில் சாய்ந்ததை தொடர்ந்து, இவர் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிவித்திகலை பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)
Add new comment