கொழும்பு, கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்

கொழும்பு, கம்பஹாவில் ஊரடங்கு தொடரும்-CURFEW-Colombo-Gampaha-Till Further Notice-Other Districts Daily-8pm to 5am-May 17-Island wide Curfew

- ஏனைய மாவட்டங்களில் மே 23 வரை பி.ப.  8.00 முதல் மு.ப. 5.00 வரை ஊரடங்கு
- மே 17 நாடு முழுவதும் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு மே 23 வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

ஆயினும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மே 18, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு தளர்தப்பட்டு வழமை போன்று அமுல்படுத்தப்படும்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில், இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயல்திறனை மீளக் கொண்டு வரும் நடவடிக்கைகள், கடந்த மே 11ஆம் திகதி திங்கள்கிழமை முதல் ஆரம்பித்த நிலையில், இது மே 16, சனிக்கிழமை வரை தொடரும் என்பதோடு, மீண்டும் மே 18ஆம் திகதி ஆரம்பமாகும்.

அத்துடன், இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளிலும் எவ்வித மாற்றங்களும் இல்லை.

முந்தைய அறிவிப்புகளின் விதிமுறைகள் அப்படியே உள்ளன.


Add new comment

Or log in with...