Monday, April 6, 2020 - 10:57pm
நாளை (07) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, (கொழும்பு 09, 14) தெமட்டகொடை, கிராண்ட்பாஸ், நவகம்புரவில் நாளை பி.ப. 2 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதியில் (கொழும்பு 15) மோதறை, மட்டக்குளி பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
Add new comment