வெளிநாட்டு போதைப்பொருள் பொதியை பெற வந்தவர் கைது

மெக்சிக்கோவிலிருந்து வந்த ஐஸ் போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொள்ள வந்த ஒருவர், கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிப்பிட்டியவை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பொதியொன்றை மத்திய தபால் பரிமாற்ற நிலைய அதிகாரி, சுங்க அதிகாரி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது குறித்த பொதியினுள் 502 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Methamphetamine) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (11) குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர்  மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...