புல்மோட்டைப் பகுதியில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) புல்மோட்டை மக்கள் வங்கிக்கு சென்ற ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வங்கியிலுள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் 5,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் சிலவற்றை மாற்றித் தருமாறு சந்தேகநபர் கேட்டுள்ளார். குறித்த நபர் தொடர்பில் சந்தேகமடைந்த வங்கி முகாமையாளர், இது தொடர்பில் புல்மோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதற்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபரிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான 13 போலி நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.
புல்மோட்டையைச் சேர்ந்த 77 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Add new comment