Sunday, January 12, 2020 - 11:12am
இரத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று (11) பிற்பகல் 12.45 மணியளவில் இரத்தோட்டை பிரதேசசபைக்கு முன்னால் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் பிரசேத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இரத்தோட்டை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment