கம்பளை பகுதியில் உணரப்பட்ட 2.0 ரிச்டர் நில அதிர்வு

கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு சிறிய அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில், நேற்றிரவு 10.49 மணியளவில் 2 ரிச்டர் அளவிலான சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நில அதிர்வின் மையமாக புபுரஸ்ஸ பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மஹாகனதரவ, ஹக்மண, பல்லேகலை, புத்தங்கல ஆகிய பகுதிகளில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...