பொலிஸில் முன்னிலையான தனுஷ்க குணதிலக்க

பாலியல் துஷ்பிரேயாகக் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் பிணையில் விடுதலையாகி இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவின் படங்கள் முதல்முறை வெளியாகியுள்ளன.

குணதிலக்கவுக்கு கடந்த வாரம் பிணை வழங்கப்பட்டதோடு அதற்காக அவரது “நண்பரின் நண்பர்” 150,000 டொலர் பிணை உத்தரவாதம் வழங்கியதாகவும் மேலும் 50,000 டொலர் கிரிக்கெட் வீரர் மூலம் செலுத்தப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிணை நிபந்தனையில் உள்ளவாறு தினசரி பொலிஸில் முன்னிலையாக வேண்டிய நிலையில் 31 வயதான குணதிலக்க நேற்று ஈஸ்ட்வுட் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

தனது ஆதரவாளர் ஒருவருடன் அவர் பொலிஸ் நிலையம் வந்திருந்தார்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின் பொதுவெளியில் காணக்கிடைத்தது இது முதல்முறை என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

டேட்டிங் செயலி மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குணதிலக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...