Thursday, June 30, 2022 - 6:00am
- தூதுவர் ஹம்சா சவூதியில் வரவேற்பு
இலங்கையிலிருந்து சென்ற 50 பேர் கொண்ட முதலாவது ஹஜ் குழு மக்காவை சென்றடைந்தது.
இவர்களை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி. ஹம்சா மற்றும் கவுன்சிலர் ஜெனரல் பலாஹ் மௌலானா ஆகியோர் ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஹாஜிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜித்தா புறப்பட்டுச் சென்றனர் இம்முறை இலங்கையில் இருந்து 968 ஹஜ் யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்கின்றனர். இறுதி ஹஜ் குழு ஜூலை 03 ஆம் திகதி சவுதி அரேபியா செல்ல உள்ளது.
Add new comment