Friday, June 17, 2022 - 1:14pm
தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் சார்ஜெண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
- தேசிய மனநல உதவி இலக்கம் 1926
- இலங்கை சுமித்ரயோ 011 2696666
- CCC line 1333
Add new comment