நடு வீதியில் தீப்பற்றிய கார்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. 
 
இவ்விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்விபத்தில் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7934","attributes":{"alt":"","class":"media-image","height":"365","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இந்த கார் கினிகத்தேனை ரஞ்ஜுராவ பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்வாறு தீப்பற்றியதற்கான காரணத்தை கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
 
எனினும் இந்த கார் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. இவ்விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
(க.கிஷாந்தன்)

Add new comment

Or log in with...