Sunday, November 22, 2015 - 11:00am
இந்தியாவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் காக்கிநாடா மற்றும் மங்களூரு கடல் எல்லையில் கைதான 34 மீனவர்களும் நேற்றிரவு (21) இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதில் 5 பேர் காக்கிநாடாவிலும், 29 பேர் மங்களூருவிலும் இருந்து அழைத்து வரப்பட்டு, காரைக்கால் துறைமுகத்திலிருந்து இந்தியப் படையினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், இலங்கை கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 16 ஆம் திகதி இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததோடு, குறித்த 29 பேரை காரைக்காலுக்கு அழைத்து வருவதற்கான செலவை இலங்கையே ஏற்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment