பேலியகொடை மெனிங் சந்தை பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.
புறக்கோட்டையிலிருந்த குறித்த சந்தைத் தொகுதியானது, பேலியகொடைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத.
4 மாடிக் கட்டத் தொகுதியான இது, ஒவ்வொரு தளத்திலும் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் துறைகளையும், குளிரூட்டல் அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களையும், வங்கிகள், 600 வாகனங்கள் தரிக்கக் கூடிய வாகனத் தரிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment