அலிசப்ரியின் நியமனம்; அடிப்படைவாதிகளால் பொறுக்க முடியாதுள்ளது

அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அடிப்படைவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருப்பதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மொஹமட் அலி சப்ரி, ஜனாதிபதியின் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி என்பதற்காக அவருக்கு புதிய நீதிமைச்சருக்கான பதவி வழங்கப்படவில்லை.

அலி சப்ரி சட்டத்தரணியாக பல வழக்குகளில் ஆஜராகி இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச வாராந்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிக்குமார் மற்றும் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது அலி சப்ரி அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் தற்போதைய நீதியமைச்சருமான அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...