Tuesday, March 31, 2020 - 3:02pm
தலைமன்னார், ஊருமலை பகுதியில் பற்றையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,150 சங்குகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (30) வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, இச்சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினரின் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து கடத்தப்பட்ட இச்சங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள சங்குகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Add new comment