Monday, October 19, 2015 - 1:30pm
இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் ஆகிய இருவரையும் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (19) பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்யா எக்னலிகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
கேலிச்சித்திரக் கலைஞரும் அரசியல் செயற்பாட்டாளருமான பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி, 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
Add new comment