ஹரி, மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேற ராணி ஒப்புதல்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து விலகி மேலும் சுதந்திரமான எதிர்காலத்தை விரும்பும் பேரனான இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனின் முடிவுக்கு ராணி எலிசபத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து கடந்த திங்கட்கிழமை அரச குடும்ப உறுப்பினர்களிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறைவான அரச குடும்ப பணிகளுடன் பிரிட்டன் மற்றும் கனடாவில் நிதிச் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு ஹரி தம்பதியினர் தீர்மானித்துள்ளனர்.

அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும் புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மனைவி மேகனுக்கு தனது குடும்பத்தில் சரியான மரியாதை கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை ஹரி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்து செல்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...