கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி ஓய்வு

2011ம் ஆண்டு முதல்  நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவராகப் பணியாற்றிவந்த கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி அவர்கள் அப் பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

இப்பேராயத்தின் தலைவராக, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளில் தான் மேற்கொண்ட 50க்கும் மேற்பட்ட மேய்ப்புப்பணி பயணங்களைக் குறித்துப் பேசிய கர்தினால் ஃபிலோனி அவர்கள் நற்செய்தியை தங்கள் சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ முற்படும் அனைத்து தலத்திருஅவைகளையும் பாராட்டினார்.

2020ம் ஆண்டு ஜனவரி  நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் பணியை நிறைவு செய்யும் கர்தினால் பிலோனி அவர்கள் புனித பூமியில் உள்ள புனித கல்லறைகளின் பாதுகாப்பாளர்கள் அமைப்பின் தலைவராக தொடர்ந்தும் பணியாற்றவுள்ளார். 

கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர்,  ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த விசுவாசிகளுக்காக  முழந்தாற்படியிட்டு பிரார்த்திப்பதைப் படத்தில் காணலாம். (ஸ)


Add new comment

Or log in with...