Wednesday, October 7, 2015 - 11:15am
கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்ட DNA மாதிரி, கைதுசெய்யப்பட்டுள்ள கொண்டயாவின் DNA மாதிரியுடன் ஒத்துப் போகவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு, நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
பொரளை ஜீன்டெக் நிறுவனத்தின் DNA பரிசோதனை முடிவுகளை மினுவங்கொடை நீதிமன்றத்தில் இன்று (07) சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இத்தகவலை நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, நீதிபதி டி. ஏ. ருவன் பதிரண, இவ்வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் 19 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
Add new comment