சஷி வீரவங்சவின் விசாரணை முடிவுக்கு வந்தது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச சம்பந்தமாக நடாத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
குற்ற விசாரணை திணைக்களம் இன்று (11) இது குறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அதன்படி குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை, தலைமை அரசாங்க வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்க தலைமை வழக்கறிஞரின் உத்தரவு கிடைக்கும் வரை, குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறு குற்ற விசாரணை திணைக்களம் கேட்டுக்கொண்டதற்கு அமைய, வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
சட்டவிரோதமான முறையில், முறையற்ற விதத்திலும் இராஜாங்க பயணக் கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டில் சஷி வீரவங்சவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...