Tuesday, August 25, 2015 - 1:00pm
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும் CSN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட இன்று (25) சற்று நேரத்திற்கு முன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
CSN தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட முறையற்ற பண கொடுக்கல் வாங்கல் பற்றி வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment