றிஸ்வான் சேகு முகைதீன்
மரண தண்டனை விதிக்கப்பட்டு கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று (01) உத்தரவிட்டார்.
தனது சொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில் விசாரணை செய்யவே அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்டோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment