Wednesday, June 22, 2016 - 10:15am
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் இன்று (22) காலை வெள்ளவத்தையில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொகுசு கார்கள் இரண்டில் வந்த குறித்த மூவரிடம், சுமார் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் ரூபா 7 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதைப் பொருளின் மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment